Tuesday, September 30, 2008

பேசுவார்கள்...

என்ன செய்வது... எது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம்...சுதந்திர நாடு இது...

"நான் மத சார்பற்றவன்..." திரு. L. K. அத்வானி சொன்னதாக பேப்பரில் இன்று படித்தபோது இன்னமும் யாரெல்லாம் எதெல்லாம் பேசமுடியும் இந்த நாட்டில்?

தமிழ்நாட்டில் நிலவும் மின்தடைக்கு காரணம் ஜெயலலிதாவின் கோடநாடு மாளிகையில் அதிகபடியாக எரியும் விளக்குகள் - திரு. ஆற்காடு வீராசாமி.

சன் டீவியை ஜெயலலிதா வாங்கி விட்டார் எனவேதான் அதில் இப்போது தி. மு.க. எதிர்ப்பு - கருணாநிதி.

கலைஞர் டீவி என்று ஒன்று தமிழ்நாட்டில் ஒளிபரப்பாவது நீங்கள் கேட்கும் போதுதான் எனக்கு தெரிகிறது, தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் ஓயாது பணியாற்றவே எனக்கு நேரம் போதவில்லை - நீங்கள் கலைஞர் டீவியில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி எது என்ற நிருபரின் கேள்விக்கு கருணாநிதியின் பதில்...

எங்கள் கட்சியின் வளர்ச்சியை பார்த்து சோனியா காந்தி கூட்டணி குறித்து நேற்று என்னிடம் பேசினார், யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி இருக்கின்றேன் - விஜயகாந்த்.

ஸ்டாலினும், கனிமொழியும் அண்ணா தி. மு. க. வில் இணைவது குறித்து பேசுவதற்க்காக தோட்டத்திற்கு வந்திருந்தார்கள் - ஜெயலலிதா.

சசிகலா என்பவர் என் வீட்டில் சமையல் வேலை செய்து வருபவர் அவருக்கும் எனக்குமான தொடர்பு என் வீட்டு சமையல் அறை வரை கூட கிடையாது - ஜெயலலிதா.

1 comment:

Kavitha said...

"Democracy" means the right to speak. I think these people are utilizing the rights of democracy appropriately, but I don't think to be democracy, instead it is just "crazy."