முடியுமானால்...
ஒரு நாள்
நானாக வாழ்ந்து பார்
நீ எனக்கு என்னவென்று புரியும்...
******************************************************************************
நீ மட்டுமேஅறியவில்லை...
பூ உறையும் வாசமாய்
என் நினைவில் நீ உறைந்து விட்டதை...
உன் கூந்தல் உதிர்த்த பூத்தொடும்
விரல் நுனியில் என் உயிர் துடித்ததை...
உன் இமைகளின் துடிப்பில்
என் இதயம் இயல்பழிந்ததை...
சரிதான்...
எந்த மேகமறியும்
தான் மறைப்பது
நிலவை என்று...
*******************************************************************************
நீ
எனக்கென கட்டப்பட்ட
கல்லறையில் கூடஇங்கு வேறொருவர் பெயர் தான்
செதுக்கப்பட்டுள்ளது...
********************************************************************************
No comments:
Post a Comment