Monday, September 29, 2008

கிறுக்கல்கள்-2

கல்லூரி நாட்களில் கவிதை என்ற பெயரில் ஏராளமான விசயங்களை கிறுக்கியது உண்டு...பெரும்பாலும் "காதல்" கவிதைகள்...

முடியுமானால்...
ஒரு நாள்
நானாக வாழ்ந்து பார்
நீ எனக்கு என்னவென்று புரியும்...

******************************************************************************

நீ மட்டுமேஅறியவில்லை...
பூ உறையும் வாசமாய்
என் நினைவில் நீ உறைந்து விட்டதை...
உன் கூந்தல் உதிர்த்த பூத்தொடும்
விரல் நுனியில் என் உயிர் துடித்ததை...
உன் இமைகளின் துடிப்பில்
என் இதயம் இயல்பழிந்ததை...
சரிதான்...
எந்த மேகமறியும்
தான் மறைப்பது
நிலவை என்று...

*******************************************************************************
நீ
எனக்கென கட்டப்பட்ட
கல்லறையில் கூட
இங்கு வேறொருவர் பெயர் தான்
செதுக்கப்பட்டுள்ளது...

********************************************************************************

No comments: