Wednesday, October 22, 2008

wanderingthoughts: சென்னை டு கோவை...

wanderingthoughts: சென்னை டு கோவை...

Wednesday, October 8, 2008

பெண்கள்...

பெண்கள் என்பவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை யாராலும் சொல்ல முடிவதில்லை... அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் (அவர்கள் அதை பலம் என்று நினைத்து வாழ்கிறார்கள் என்பது மற்றொரு நகைப்பு...) அவர்களுக்கு மனிதர்களில் நல்லவர், கெட்டவர் என்று இரண்டு வகை உண்டு என்பதை அறியாதது... அவர்கள் இரண்டு வகை மனிதர்களுக்கும் ஒரே அளவுகோலை வைத்தே அலைகிறார்கள் என்பது மிகப்பெரிய சோகம்... அதை விட மிகப்பெரிய வருத்தம் அவர்கள் தங்களுக்கு இந்த பலவீனம் இருக்கிறது என்பதை உணராமல் இருப்பது, அப்படியே உணர்ந்தாலும் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பது இன்னொரு சோகம்..

அதெப்படி இவர்களால் உறவுகளை ஏற்படுத்தி கொள்ளவும், முறித்து கொள்ளவும் இவ்வளவு எளிதாக முடிகின்றது என்பது இன்னொரு மிகபெரிய ஆச்சரியம்...(அல்லது முறித்துக்கொண்டது போல் நடிக்கவாவது முடிகின்றது). இவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆழமான மனது, அதில் ஏன் இவ்வளவு அழுத்தமான, கடினமான கதவுகள்?

பெண்கள் பொதுவாக உணர்ச்சிவயப்பட்டவர்கள், அவர்கள் சட்டென்று இளகி விடுவார்கள், ஏதேனும் ஒரு விஷயம் என்றால் உருகி விடுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள்... எல்லாமே சரிதான் ஆனால் இவர்கள் இதையெல்லாம் செய்வது அவர்கள் நல்லவன் என்று நினைத்து இருக்கும் ஆண்களிடம் தான்... வேடிக்கை என்னவென்றால் அவர்கள் அப்படி நல்லவன் என்று முடிவு செய்ததே தவறான முடிவாக இருக்கும். இவர்களிடம் இருக்கும் மற்றொரு விஷயம், ஓரிடத்தில் தவறு செய்து அதனால் ஏற்பட்ட காயம், வலி காரணமாக அதன் பின்பு கிடைக்கும் உண்மையான அன்பிற்கும் சந்தேகத்தை தான் பரிசாகவும், அலட்சியத்தை தான் அன்பளிப்பாகவும் கொடுப்பார்கள்...

யோசித்து பார்த்தால் நமக்கெல்லாம் அன்பு என்ற ஒன்றை முதன் முதலில் காட்டியதே, அது எவ்வளவு உயர்ந்தது, உன்னதமானது என்பதையெல்லாம் உணர்த்தியது நம் அம்மாதான்...ஒரு பெண் தான்... எனினும் நம் வாழ்க்கையில் நாம் தினந்தோறும் அன்பிற்கும் ஆதரவிற்கும் ஏங்கி தவித்து ஆறுதலாக ஒரு வார்த்தை எதிர்பார்க்கும் ஒரே இடம் பெண்கள் என்னும் போதும், அதை அவர்கள் நன்றாக அறிந்திருந்த போதும், நமக்கு ஏமாற்றமே கிடைக்கின்றது எனில் இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை...

எனினும் என் போன்றவர்களுக்கு வாழ்க்கை என்பது...Emily Dickenson சொன்னது போல்...

IF I can stop one heart from breaking,
I shall not live in vain;
If I can ease one life the aching,
Or cool one pain,
Or help one fainting Robin
Unto his nest again,
I shall not live in vain.

ஒரே ஒரு இதயம் முறிவதை தடுக்க முடிந்தால், ஒரு வலியை, வேதனையை குறைக்க முடிந்தால், கூட்டில் இருந்து தவறி விழுந்த குருவியை மீண்டும் அதன் கூட்டுக்கு திருப்பி அனுப்ப முடிந்தால் நான் வாழ்ந்தது வீண் அல்ல...

Tuesday, October 7, 2008

ஏன் இப்படி...?

எத்தனையோ முறை நாள்தோறும் பேப்பரிலும், புத்தகங்களிலும் ஏதேனும் ஒரு கருத்துக்கணிப்பு, பேட்டி புகைப்படத்துடன் வெளியாகிறது. டீவியில், நடந்து செல்லும் யாரோ ஒருவரை நிறுத்தி இதை பற்றி என்ன நினைகின்றீர்கள், அது சரியா? இதை பற்றி அவர் சொன்னது சரியா என்றெல்லாம் கேட்கின்றார்கள்...

நானும் மெட்ராஸில்தான் இருக்கின்றேன், தினந்தோறும் வெளியில் வருகின்றேன்... சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு என்று எல்லா இடங்களிலும் சுற்றி திரிகின்றேன் ஆனால் ஒரு நாள் கூட, ஒரே ஒரு முறை கூட யாருமே நிறுத்தி கேட்டதில்லை ஏன்? எனக்கு தெரிந்தவர்களை கூட கேட்டதில்லை ஏன்? இவர்கள் எதன் அடிப்படையில் பேட்டிகாண சக மனிதர்களை தேர்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை, உங்களுக்கு தெரியுமா?

**********************************************************************************
இன்னமும் ஒரு உதவி...

காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் கேள்விதான்... அன்பு முழுவதையும் கொட்டினாலும் ஏன் பெண்களுக்கு நம் அன்பின் மீது கூட சந்தேகம் வருகிறது... அன்பு செலுத்த ஏதேனும் விதி முறைகள் உள்ளதா? இல்லை அவர்களின் பார்வையில் அன்பு என்பதன் வடிவம் எது...

ஒரு மனிதன் தன் சக உயிரின் மீது காட்டும் அன்பின் எல்லை ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றாலும், இவர்கள் மட்டும் எல்லையின் அளவை விரிவாகி கொண்டே போவது ஏன்... அன்பு என்பது எல்லை இல்லாததுதான் என்றாலும் அன்பு செய்யும் மனதின் எல்லைகளையே இவர்கள் சந்தேகப்படுவதுதான் பிரச்சனையின் மூல காரணம் என்று எண்ணுகிறேன்... விளக்கம் ப்ளீஸ்...

********************************************************************************
திரிபு...
இங்குள்ளவர்களின்
நட்பு சிலாகிப்பு
பால் மாறுபாடெனில்
திரிந்துபோய்விடுகிறது