இப்புவி தோன்றிய போதே
அடர் செம்பழுப்பு நிற
அம்மண்ணும் தோன்றியிருக்க வேண்டும்
அந்தக்கலயத்தின் புராதன தோற்றத்திற்கு
அதுவே காரணமாக
இருக்கலாம் எனத்தோன்றியது
கலயத்தின் கழுத்து மிகுந்த வனப்புடன்
ஆனால் சற்றே அதிக குறுகலாக இருந்தது
மனிதருக்கு அதுபோலிருந்தால்
நிச்சயம் மூச்சு திணறலை ஏற்படுத்தும்...