Saturday, March 13, 2010

ஒரு வருடம்....

ஏறக்குறைய ஒரு முழு வருடம் கழித்து எழுதுகிறேன்.

எத்தனை மாற்றங்கள் தனி மனித வாழ்விலும், சமுதாயத்திலும்...

இப்போதெல்லாம் மாற்றங்கள் ஏற்பட நாட்கள், ஏன் நிமிடங்களே போதுமானதாக இருக்கிறது...1900 முதல் 1999 வரை ஏற்பட்ட அதே அளவு மாற்றங்கள் ௦ கடந்த 10 வருடங்களில் ஏற்பட்டுள்ளது...மனிதர்களுக்கிடையேயான விரிசலும் தான்...நிறைய இழந்து கொஞ்சம் பெற்றுள்ளோம்...பெற்றுள்ளவையும் கொஞ்சம் நேரமே நிலைக்கும் தன்மை கொண்டதாக இருப்பது இன்னமும் விசேசம்...

கடந்த ஒரு வருடத்தில்.... ஒபாமா பதவி ஏற்ற கையுடன் நோபெல் பரிசு வாங்க விமானம் ஏறினார், அதே நேரம் ஈராக்கில் இருந்தும், ஆப்கனிஸ்தானில் இருந்தும் விமானகள் கிளம்பி இருக்கும், இறந்து போன அமெரிக்க வீரர்களின் பிணங்களுடன்... மூன்று விமானங்களும் நாடு வானில் சந்தித்து கொண்டனவா என்று தெரியவில்லை...This is not the change we want. நோபெல் கேலிக்குரிய விசயமாக போனது.

மே 17, சிறிலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாள் என்று சிங்கள அரசாங்கம் சொல்லுகிறது, பிரபாகரன் மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது...இன்னமும் வருவர் என்று எல்லோரும் எதிர்பர்ர்கின்றனர்...இது இரண்டு விசயங்களை தெளிவு படுத்துகின்றது.. ஒன்று அவர் மிகபெரிய தலைவராக இருந்துள்ளார்...மற்றொன்று தனக்கு பிறகு யார் தலைவர் என்பதை தெளிவாக சொல்லவில்லை... யாரும் சாகாவரம் பெற்று வருவதில்லை...எல்லா புரட்சியாளர்களும் தங்கள் வாழ்நாளிலேயே விரும்பும் மாற்றத்தை அடைவதும் இல்லை, எனவே அடுத்த தலைவர் என்று ஒருவர் வேண்டும் எல்லா இடங்களிலும்...இதுதான் இலங்கை தமிழர் முன் உள்ள மிகபெரிய சோகம்.

தமிழ்நாட்டில்....பாசகார தலைவனுக்கு 365 நாளில் 371 பாராட்டு விழாக்கள். கொடநாடு செல்லும் ரோடு எல்லாம் தேய்ந்து போய்விட்டது, ADMK தலைமையகம் அங்கே மாற்ற பட்டுவிட்டதால்....

ஸ்டாலின் துணை முதல்வர்...சீக்கிரம் முதல்வர் ஆக வாழ்த்துக்கள்...கருணாநிதி தன்னுடைய காலத்திலேயே இதை செய்வார் என்று நம்புகிறேன்...இல்லையென்றால்...

தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமை 73,௦000௦௦ கோடியாக உயர்ந்துவிட்டது. எனக்கு ஏற்கனவே இருக்கும் சொந்த கடன் 13,000 உடன் மேலும் 10,000 சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்... உங்கள் தலையில் உள்ள கடனின் அளவு...அரசாங்கம் மூலம் 10,000 ரூபாய்... வாழ்த்துக்கள்.

டாஸ்மாக்கில் விற்பனை நாளொரு சாதனையும் பொழுதொரு போதையுமாக வளர்கிறது... பெரியார் கள்ளுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய தென்னந்தோப்பை வெட்டி எறிந்ததாக படித்ததாக ஞாபகம்...பெரியார் வழி, பெரியார் கொள்கையில் ஆட்சி நடத்துவதாக கூறி கொள்ளும் இந்த ஆட்சியில் டாஸ்மாக் நடத்துவதும் அவர்கள் தான்...இப்போதெல்லாம் இது போன்ற மாற்றங்கள் மட்டுமே நடக்கிறது...

இன்னமும் நிறைய இருக்கிறது இந்த ஒரு வருடம் பற்றி எழுத..தொடரும் போடும் முன்....Love you all...

இனி தொடர்ந்து சந்திப்போம் என்கிற நம்பிக்கையுடன்...