Saturday, March 13, 2010

கிறுக்கல்கள் 5

காத்திருப்பு...
தெறிக்கும் அலைகளின்
துளிகளில் சிதறும் உன்முகம்
விரல்களில் உதிரும்
மணல்துகள்களாய்
ஞாபகங்கள் நழுவும்...
இமைகளின் ஓரம்
நினைவுகள் நீராய் தேங்கும்...
கடிகாரத்தின் முட்கள் குத்தி
இதயத்தில் ரத்தம் கசியும்...
காதல் என்பது மெல்லச்சாதல்...

No comments: