Saturday, March 13, 2010

கிறுக்கல்கள் 4

மௌனம் கொண்டு...
மௌனம் உணர்த்தும் அர்த்தங்களை
சொற்கள் என்றுமே
முழுமையாக செய்வதில்லைதான்...
துளி மௌனம் போதும்...
துளி விஷத்தை போல..

சொற்கள் கோர்க்கும்
மாலைகளை விட
மௌனம் கோர்க்கும்
சங்கிலி வலுவானதுதான்
கரங்களை இணைக்கவும்...
கழுத்தை நெறிக்கவும்...

பூக்களை பறிப்பதுபோல்
என் வார்த்தைகளை பறித்துக்கொண்டு
மௌனத்தை அளித்துவிட்டாய்
உன்மேலான என் காதலுக்கு பரிசாக...
பூப்பறித்தல் பூஜைக்கு என்றாலும்
செடிக்கு அது ஊனம்தான்...

No comments: