Saturday, March 13, 2010

கிறுக்கல்கள் 3

உன்னுடன் இருக்கும்போது மட்டுமே
என்னுடன் இருப்பதாய் உணர்கிறேன்...

நீ ஆடைகளை துறந்துவிட்டு
வெட்கத்தை அணிந்து கொண்டாய்...
நான் உன்னை அணிந்துகொண்டு
வெட்கத்தை துறந்துவிட்டேன்...

எரியாத விளக்கொன்றின் கீழ்
எரிந்து கொண்டிருந்தோம் நாம்...

நீ கவனித்து கவனித்து
உடுத்துபவை தான்
என் கவனம் கலைக்கின்றன...

No comments: