Saturday, March 28, 2009

ஞாயிற்றுகிழமைகளின் காலைகளில்...

பொதுவாகவே ஒரு நிச்சயமற்ற சோம்பல் உடலை ஆட்கொண்டிருக்கும்...வெய்யில்கால மத்தியான வேளைகளில் அசைந்துகொண்டிருக்கும் மரங்களின் இலைகளை போல...

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது காணும் காட்சிகள் நிச்சயம் இன்பம் அளிப்பவையாக இருக்கின்றது...

30களின் மத்தியில் வயதை கொண்டிருக்கும் கணவனும் மனைவியும் சேர்ந்து செல்லும் காட்சியில் என்னை முதலில் கவர்வது பெண்ணின் முகத்தில் தெரியும் உற்சாகமும், கணவனை அடிகொருமுறை உரிமையோடு தொட்டு பேசுவதும், நடையில் உள்ள சின்ன துள்ளலும், கழிந்த இரவின் "காதல்" இன்னமும் உள்ளத்தில் ஓடிகொண்டிருகின்றது என்பதை காட்டும்...

கணவனின் முகத்திலோ முழுமையான அமைதியை காணலாம்... வரலாற்றின் பக்கங்கள் முழுக்க காணப்படும், பெண்களால், பெண்களுக்காக, பெண்ணை முன்னிறுத்தி நடைபெற்ற அத்தனை போர்களும் இந்த "அமைதிக்காக" என்ற எண்ணம் மனதில் எழும்...

எனகென்னவோ ஒரு பெண்ணை அடைவதில் ஆணுக்கிருக்கும் இன்பத்தைவிட... தான் விரும்பும் ஆண் தன்னை அடைந்தபின் அதை நினைத்துபார்த்து பெண் அடையும் இன்பம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது...
********************************************************************************* இலக்கியங்கள் எல்லாம் நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியில் தான் நிகழ்கின்றன என்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை உண்டு... அதை மேலும் உறுதி செய்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றை இந்த வாரம் சந்தித்தேன்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் தன் பேருந்தின் குறுக்கே வந்துவிட்ட ஒரு வயதான பெண்மணியை சென்னை செந்தமிழில் திட்டிய ஒரு டிரைவருக்கு அந்த அம்மா கொடுத்த பதில்...

"இந்த மாதிரி கொழுப்பெடுத்து பேசறதுக்குத்தான் ஆண்டவன் உன்னை இப்படி மழையிலும் வெய்யிலிலும் செக்கிழுக்க வெச்சிருக்கான்..."

டிரைவர் பஸ் ஓட்டுவதை என்றேனும் இந்த கோணத்தில் பார்த்திருக்கின்றீர்களா?

1 comment:

Anonymous said...

Penn epodum unarchigalal pinnapattaval. Sandosham endralum, varutham endralum nadandu mundindavai anaithum aval nenaivugalil nadi neerpol oodikondae erukum. Oru aanin aasai kamathodu mudinduvidum aanal oru pennin aasai kadalodu thodarum. Pennuku kadal erundalthan kamam thevaipadum aduvae aval rasipadarkum, urimai seluvadarkum karanamaga amaigiradu.