Sunday, March 1, 2009

எல்லோரும் நலமா?

அப்புறம் எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள் (எனக்கு தெரிந்து என்னை தவிர யாரும் இதை படிப்பதில்லை) இருந்தாலும் கேட்டு வைப்போம்.

இலங்கையில் தமிழர்கள் இறக்கும் எண்ணிக்கையும், கிரிக்கெட் ஸ்கோரும் நமக்கு கிட்டத்தட்ட ஒன்றே என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

அந்த பிரச்சனைக்கு ஒரு வழி சொல்வார்கள் என்று பார்த்தால், இங்கு இருக்கும் உலகத் தமிழர்களின் ஒரே ஒப்பற்ற தலைவரும், லெனினுக்கு பிறகு தோன்றிய ஒரே புரட்சியாளர் என்பதால் புரட்சிதலைவி என்று அழைக்கபடுபவரும் இங்கு அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் பிரபாகரனும், ராஜபக்சேயும் எங்கள் பிரச்சனைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்கிறோம் தயவு செய்து நீங்கள் சிரமப்படாதீர்கள் என்று அறிக்கை வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை...

இதற்கிடையில் தன் மகன் ஒரு மத்திய மந்திரி என்ற நினைவே நமக்கு வரக்கூடாது என்பதற்காக அவரை தமிழ்நாட்டில் இருட்டடிப்பு செய்த திரு. அய்யா ராமதாசை நான் மனதார பாராட்டுகிறேன். கடைசியாக அவர் புகைப்படம் பேப்பரில் வந்தது அன்புமணி அவர்கள் தன் குடும்பத்துடன் பொற்கோவிலுக்கு விஜயம் செய்ததுதான், அடுத்த முறையும் மந்திரியாக வேண்டும் என்று வேண்டி இருக்கலாம்...

இன்னமும் நிறைய இருக்கிறது... இது இன்னமும் முடியவில்லை...

இங்கேயும் போராட்டம் தான் தன் குடும்பம், செல்வாக்கு, ஆட்சி, சொத்து ஆகியவற்றை காப்பாற்ற...

அங்கேயும் போராட்டம் தான் தன் உயிர், கற்பு, வாழ ஒரு இடம்,,. சுதந்திரமான காற்று... எது ஜெயிக்கும் எண்டு சொல்லுங்கள்..

No comments: