Monday, March 23, 2009

தேர்தல் திருவிழா...

ஒரு வழியாக தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது... இனி கொஞ்சநாட்களுக்கு மிக சிறப்பாக பொழுது போகும்...

தமிழ் நாட்டில் சொல்லவே வேணாம்... ஏற்கனவே இரண்டு செஞ்சட்டை தோழர்களும் போயஸ் தோட்டத்து ஆதி பராசத்தியிடம் சேர்ந்து விட்டனர்... ஆதி பராசத்திக்கும் சிவப்புதான் பிடித்த கலர், எங்களுடையதும் சிவப்புதான், எனவேதான் சேர்ந்து விட்டோம் என்று காரணம் சொல்லிவிட்டார்கள்... அவர்களை சொல்லியும் தப்பில்லை.. ஒவ்வொரு தேர்தலுக்கும் என்ன காரணம் தான் அவர்களால் சொல்ல முடியும்...

மருத்துவர் அய்யாவிற்கு இந்த தொந்தரவுகள் எல்லாம் இல்லவே இல்லை.. ஏன் என்றால் அவர் சொல்லும் காரணங்களை யாருமே நம்புவதுமில்லை, மதிப்பதுமில்லை... இது அவருக்கும் மிக நன்றாக தெரியும்...

இறுதியாக மிஞ்சுவது... நம்ம கருப்பு எம்ஜியார்... கேப்டன் டீவீக்கு அனுமதியும், 16 சீட்டும், தேர்தல் செலவிற்கு பணமும் கொடுத்தால்.. அன்னை சோனியா காந்திதான் இந்தியாவை வாழ வைக்க வந்த தெய்வம் என்று சொல்ல ரெடியாக இருக்கிறார்...

இந்த ஓட்டு பொறுக்கிகளுக்கு எதுவும் சம்மதமே...

உலகின் மிகபெரிய ஜனநாயக (?) நாட்டின் தேர்தல் முறைகள் மிகவும் மேம்பட்டவை தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை... சில புள்ளி விபரங்கள்...

சுமார் இருபது லட்சம் வீரர்கள் பாதுகாப்புக்கு உபயோகப்படுத்த படுவார்கள்...

சுமார் 8000 கோடி ரூபாய்கள் செலவழிக்கப்படும் (கவனிக்க, இது தேர்தல் கமிசனால் செலவு செய்யப்படும் அரசாங்க பணம்...)

நமது நாட்டில் ஓட்டு உரிமை உள்ளவர்களின் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம்...

தேர்தலுக்காக நம்ம அரசியல்வாதிகள் செலவிடும் தொகை ஏறத்தாழ 15000 கோடிகள் இருக்கும் என்று மதிப்பிட பட்டுள்ளது.. (பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொகை... 35 லட்சங்கள்!?)

இரநூறு டன் அழியாத மை தேவைப்படும்...

வாழ்க இந்திய ஜனநாயகம்... வளர்க பாரத நன்னாடு...

No comments: