Wednesday, August 27, 2008

விமர்சனம்?!

நேற்று 11 வருடங்கள் கழித்து மீண்டும் காதலுக்கு மரியாதை பார்த்தேன். அப்போது பட்டுக்கோட்டையில் பார்த்தேன், கல்லூரியில் இருந்து, காலேஜ் இருந்தது தஞ்சாவூரில், 80 KM பயணம் செய்து இந்த படத்தை பார்த்தேன் என்பது இப்போது என்னை சற்று வியப்புற செய்கிறது. இது நல்ல இசையால் நல்ல படம் என்ற பெயரை பெற்றது என்பது இப்போது தான் புரிகிறது, சில நல்ல நடிகர்களினாலும், ஒரு சில நல்ல வசனங்களாலும், மீதி இருக்கும் அத்தனை குறைகளையும் மழுப்பி விடுகிறது இசை. ஒரு சில நடிகர்களை தவிர, விரல் விட்டே எண்ணி விடலாம் தமிழ் நடிகர்களை, மற்ற எல்லோரும் மலையாள நடிகர்கள், நல்ல வேளை வசனம் எல்லாம் தமிழ். சில காட்சிகள் மிக சிறந்த நகைச்சுவை படத்தின் சாரத்தை கொண்டு விளங்குவது இந்த படத்தின் சிறப்பு அம்சமாகும், உதாரணமாக கதாநாயகனும் கதாநாயகியும் பிரிவதாக முடிவு செய்த பின்பு அவர்கள் நண்பர்கள் இருவரும் பேசும் வசனங்கள், குறிப்பாக கேசவனாக நடிக்கும் சார்லீ பேசுவது, அதுவும் விஜய் அவரிடம் போய் தயக்கத்துடன் பேச தொடங்கும் போது, சார்லீ பேசும் வ்சனங்கள், ஒரு பானை சோற்றுக்கு... என்னதான் ஹீரோவாக இருந்தாலும் ஷாலினியை விட விஜய் லிப்‌ஸ்டிக் அதிகம் யூஸ் பண்ணியிருக்கக் கூடாது, படம் முழுவதும் அவர் அவ்வாறே வருவதும் நம்மை மகிழ்விக்கததான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எனினும் எல்லாவற்றாயும் தாண்டி தன்னுடய பாடல்களாலும், குறிப்பாக பின்னணி இசை, இப்போது இருக்கும் (முன்னணியில் ?!) இசை அமைப்பாளர்களுக்கு ஒரு பாடம், க்ளைமாக்ஸில் ஸ்றீவித்யா ஷாலினியிடம் நடந்து செல்லும்போது 5 செக்கேண்டு ஒலிக்கும் அந்த தபெலா, அதற்கு முந்தைய காட்சியில் ஸ்ரீவித்யா கூப்பிடும் போது விஜய் காட்டும் முக பாவனைகளையும் மறக்க செய்கிறது, இளையராஜாவிற்கு என் வந்தனங்கள்.

No comments: